Monday, March 16, 2009

மகனை அடிக்கப் பாய்ந்த சீனியர் லாயர்.

"வெற்றி வெற்றி சக்ஸஸ்"என்று கூவிக்கொண்டே வீட்டில் நுழைந்த மகன் கிருஷ்ண குமாரை ஏறிட்டுப் பார்த்தார் தந்தை ராகவன்.


ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனியர் லாயர்.அவரது ஒரே மகன் கிருஷ்ணகுமாரையும் வக்கீலுக்குப் படிக்க வைத்து,அவனும் ஒருவழியாகப் பாஸாகி இன்று தான் முதல் முதலாக நீதிமன்றத்திற்குச் சென்று வந்துள்ளான்.


"என்னடா வெற்றி,சக்ஸஸ்ன்னு கூவிகிட்டே வர்றே.கோர்ட்டில் என்ன ஏதாவது பிரச்சனையா?"


"அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா.நீங்க ரொம்ப வருஷமா வாதாடிகிட்டு வந்தீங்களே.ஒரு நாப்பது வருஷம் இருக்குமாப்பா.அந்தக் கேஸ் இன்னிக்கு விசாரணைக்கு வந்துச்சு.அதுலே நான் பிரமாதமா வாதாடி ஜெயிச்சுபுட்டேன்.ஜட்ஜ் கூட என்னைப் பாராட்டினாருப்பா."


"டேய்,டேய்.எந்தக் கேஸ்ரா.அந்த மாங்குளம் ஜமீந்தார் கேஸா?


"ஆமப்பா."


"அட பாவிப்பய மவனே.இதுக்காடா ஒன்னை வக்கீலுக்குப் படிக்க வெச்சேன்.மொத்தப் பொழைப்பையே கெடுத்திட்டீயேடா.உன்னை என்ன செய்யறேன்.பாரு."என்றவாறே மகனைநோக்கிப் பாய்ந்தார் ராகவன்.


"என்னை ஏம்பா திட்றீங்க?நான் நல்ல விதமாத்தானே வாதாடி ஜெயிச்சு வந்துருக்கேன்?"


"உன் வாதத்தைலே இடி விழ.இந்த ஒரு கேஸை வச்சுத்தாண்டா இவ்வளவு சொத்து சேர்த்து,கார் பங்களா வாங்கி,ஒங்கம்மாவையும் கட்டிகிட்டு ஒன்னையும் பெத்துப் படிக்க வச்சேன்.இந்தக் கேஸை வச்சு செய்ய வேண்டியதுன்னு இன்னும் எவ்வளவோ இருக்கு.என் எதிர்காலத்தையே ஒண்ணுமில்லாமப் பண்ணிட்டியேடா பாவி"


மகனை மொத்த ஆரம்பித்தார் ராகவன்.

No comments:

Post a Comment