“இந்துக்களுக்கு எதிராக யாராவது கைநீட்டினால், இந்துக்கள் பலவீனமானவர்கள் என்றோ அவர்கள் பின்னால் யாருமில்லை என்றோ யாராவது நினைத்தால், பகவத் கீதை மீது ஆணையாகச் சொல்கிறேன்... நான் அவர்களது கைகளை வெட்டுவேன்” என முழங்கி இருக்கிறார் ஒருவர்.பெயர் என்னமோ வருண் காந்தியாம்.
இது குறித்து தினமலரின் இன்றைய இணையப் பக்கத்தில் வெளியாகி இருக்கும் செய்தி கீழே:
"புதுடில்லி : சர்ச்சைக்குரிய விதத்தில் வருண்காந்தி பேசியதற்கு பா.ஜ., எந்த விதத்திலும் பொறுப்பில்லை என அக்கட்சி தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளது. உ.பி., மாநிலம் பிலிபித் தொகுதியில் பிரசாரத்தின் போது வருண்காந்தி பேசியது தொடர்பாக தேர்தல் கமிஷன் பா.ஜ., கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது . இந்த நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.., வருண் பேச்சுக்கு நாங்கள் பொறுப்பல்ல, தேர்தல் கமிஷன் வருண் பேச்சு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் . இதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அமைக்க வேண்டும் . இவ்வாறு பா.ஜ., கூறியுள்ளது . மேலும் இது தொடர்பாக பா.ஜ., வுக்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது."
என்னமோ சொல்வாங்களே!....ம்புகிற வரைக்கும் ....ம்பிட்டு உப்புக் கரிக்கிதுன்னானாம்.பழமொழி அசிங்கமானது தான். ஆனால் இவர்கள் பேசுகிற பேச்சும்,பின்னர் அதை மறுக்கிற முறையும் பழமொழியைவிட அசிங்கமாக இருக்கிறதே!
ஓட்டுப் போடும் மக்களை என்னவென்று தான் நினைக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள்?
Friday, March 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
idhukaagavey ivanungaluku aapadikanum.. ivlo thimir, veriyudan irukura ivanunga kita adhigaarathai kudutha yenaaguradhu..
நாடகம்!
எவ்வளவு நடிகர்கள்?
அடப்பாவிகளா!
நேற்று வரை நமக்கு குரல்....ஆனால், இன்ட்று
பதவி மோகம்.....
தமிழ் நாட்டு தமிழர்கள் என்ன செய்ய போகிரோம்?
வாங்க யாத்ரீகன்.நன்றி.
வாங்க பதி.மக்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போவது தான் சோகம்.நன்றி.
Post a Comment