நாளை 16ந் தேதி முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கம்போல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் வழக்குரைஞர்கள் ஆஜராகாத பட்சத்தில் இலவச சட்ட ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கும் வழக்குரைஞர்களைக் கொண்டு வழக்குகள் நடத்தப்படுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குரைஞர்கள் சங்கம் எதிர்காலத்தில் நீதிமன்றங்களில் ஆஜராகும்போது நீதிபதிகளை"மை லார்ட்"என்றோ "யுவர் ஆனர்"என்றோ அழைக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இப்படியே இவர்களின் போராட்டம் தொடருமானால் எதிர்காலத்தில் கீழ்க் காணும் தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிகிறது.
1.கருப்பு கவுன்,கோட் போட மாட்டோம்.இவை போடாமலேயே ஆஜராவோம்.
2.வழக்குரைஞர் எனறு அடையாளம் காண்பிக்கக் கூடிய வெள்ளைக் காலர் அணியமாட்டோம்.
3.வெள்ளை சர்ட் வெள்ளை பேண்ட் அணிய மாட்டோம்.
4.கலர் கலராக சட்டை,டீசர்ட்,கலர் பேண்ட்,பெர்முடாஸ் போன்றவை அணிந்து கொண்டு ஆஜராவோம்.
5.ஷூ போட மாட்டோம்.செருப்பு போட்டுக் கொண்டு வருவோம்.
6.ஷூ,செருப்பு எதுவும் போடாமல் வெறுங்காலுடன் ஆஜராவோம்.
7.நீதிமன்றத்திற்குள் நுழையும்போது நீதிபதியை வணங்க மாட்டோம்.நீதிபதி போகும் போதும் வணங்க மாட்டோம்.
8.நீதிபதி வரும்போது மரியாதை தெரிவிக்கும் விதத்தில் எழுந்து நிற்க மாட்டோம்.
9.நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது அவ்வப்போது "சத்தம் போடாதீங்க"என்று டவாலி சத்தமாகக் கூறுவார்.அதைப் புறக்கணிக்கும் விதமாக அனைவரும் சத்தம் போட ஆரம்பிப்போம்.
10.வழக்கு விசாரணை நடக்கும்போது இருக்கையில் அமர்ந்துகொண்டே தான் விசாரணையில் பங்கேற்போம்.குறுக்கு விசாரணை,வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் அமர்ந்து கொண்டே செய்வோம்.
11.ஒவ்வொரு நாளும் நீதிபதி விசாரணை ஆரம்பிக்குமுன்னர்,"எங்களுக்குச் சாதகமாக மட்டுமே தீர்ப்பு வழங்குவேன்"என்று சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எங்கே செல்லும் இந்தப் பாதை...
யாரோ.. யாரோ அறிவார்....
நன்றி காந்தா.
Post a Comment