பனிரெண்டு ஆண்டுகள் வன வாசமும் ஓராண்டு அஞ்ஞாத வாசமும் முடிந்தபின் பாண்டவர்கள் ஐவரும் துரியோதனன் முன்பு ஆஜரானார்கள்.
“தம்பி துரியோதனா.பதின்மூன்றாண்டு வனவாசம் முடிந்து விட்டது.”
“அதுக்கென்ன இப்போ?”
“எங்கள் ராஜ்ஜியத்தைத் திருப்பித் தா.”
“ஒப்பந்தத்தில் அப்படி எல்லாம் இல்லையே!சூதாட்டத்தில் தோற்றால் ராஜ்ஜியத்தை இழந்து வனவாசமும் அஞ்ஞாத வாசமும் போக வேண்டும் என்று தானே ஒப்பந்தம்.?”
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது துரியோதனா.”
“ஹூஹும்.தர மாட்டேன்.”
“சரி.ஐந்து நகரமாவது கொடு.”
“தர மாட்டேன்.”
“ஐந்து கிராமமாவது கொடு.”
“தர மாட்டேன்."
“ஐந்து தெருக்களாவது கொடு.”
“தர மாட்டேன்.”
“சரி.ஐந்து வீடுகளாவது கொடு.”
துரியோதனன் யோசித்தான்.
“சரி.வீடு வேண்டும் என்று ஆளுக்கு ஒவ்வொரு மனு எழுதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு மனுச் செய்யுங்கள்.காலக்கிரமத்தில் உங்களுக்கு வீடுகள் கிடைக்கும்.”என்றான்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு மனுச் செய்து வீடுகள் பெறுவதை விட மீண்டும் காட்டுக்கே சென்று விடலாம் என்று முடிவு செய்து பாண்டவர்கள் ஐவரும் காட்டுக்கே திரும்பி விட்டார்கள்.
Sunday, March 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment