Tuesday, April 21, 2009

கருணாநிதியின் கபட நாடகமும் சுடாலினின் சொந்த புத்தியும்

தேர்தல் பிரச்சாரத்திற்காகக் கன்னியாகுமரி வந்துள்ள அமைச்சர் சுடாலின்(நன்றி கோவி கண்ணன்)கீழ்க்"கண்டபடி" கூறியுள்ளதாக தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது.
"இலங்கை பிரச்னையை அரசியல் ரீதியாக கிளப்பி விட்டுள்ளனர். மக்கள் இதை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை. இலங்கை பிரச்னையில் தி.மு.க., 1956 முதல் போராட்டம் நடத்தி வருகிறது."

அடப்பாவிகளா!

அப்படீன்னா ஒங்கப்பன் நாளைக்குத் தமிழ்நாடு முழுதும் வேலைநிறுத்தம் நடக்கும் என்று அறிவித்திருக்கிறாரே! அதுலேயும் தமிழக மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாரே!

அதெல்லாம் யாருக்காக?மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாதபோது வேலை நிறுத்தம் யாருக்காக?

ஒருவேளை மக்கள் என்று சுடாலின் சுட்டியது கருணாநிதியின் மக்களைத் தான்,தமிழ்நாட்டு மக்களை அல்ல என்று எடுத்துக் கொள்ளலாமா?

நீங்க‌ 1956லிருந்து போராடிய‌து எல்லாம் (க‌ருணாநிதியின்) ம‌க்க‌ளுக்கும் உற‌வின‌ர்க‌ளுக்கும் சொத்து சேர்க்க‌த்தானே!போறும் போறும்ன்ற அளவுக்குப் பொட்டி நெரம்பியாச்சு.அப்புறம் இப்படித்தானே பேச்சு வரும்?

ந‌டைபெற‌விருக்கும் பாராளும‌ன்ற‌ப் பொதுத் தேர்த‌லில் நீங்க‌ தோற்க‌ப் போவ‌து ம‌ட்டும‌ல்ல‌,இத்த‌கைய‌ பேச்சுக்க‌ளால் டிபாசிட் இழ‌ந்தாலும் விய‌ப்ப‌த‌ற்கில்லை.‌

2 comments:

ramalingam said...

சரியான கேள்வி. சிறகு பிரி. பிறகு சிரி என்று போடுங்கள். ரைமிங் சரியாக இருக்கும்.

மாண்புமிகு பொதுஜனம் said...

வாங்க ராமலிங்கம்.நன்றி

Post a Comment